வளைகுடா நாடுகள் மற்றும் சில வெளிநாடுகளில் நேற்று அரஃபா நோன்பை கடைபிடித்து இன்று செவ்வாய்க்கிழமை தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் இன்று கத்தாரிலும் ஹஜ்ஜுப் பெருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கத்தாரில் உள்ள அதிரையர்கள் ஹஜ்ஜுப் பெருநாளை விமரிசையாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாடி வருகின்றனர்.