Thursday, April 18, 2024

ஓகி புயல் பாதிப்புகளை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை கன்னியாகுமரி வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Share post:

Date:

- Advertisement -

புதுடெல்லி: ஓகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நாளை வருகிறார். அண்மையில் வங்கக்கடலில் உருவான ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த சேதம் ஏற்பட்டது. கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. ஏராளமான மீனவர்கள் மீட்கப்படாத நிலையில் தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அவர்களின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் பார்த்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட்டார். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் பாதிக்கப்பட்ட பல்வேறு பகுதிகளையும், மீனவ மக்களையும், விவசாயிகளையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதே போல் மேலும் பல்வேறு கட்சி தலைவர்கள் குமரி மாவட்டத்துக்கு வந்துள்ளனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை கன்னியாகுமரி வர உள்ளார். ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அவர் பார்வையிடுகிறார். நாளை காலை 10.30 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் வருகிறார். அதனை தொடர்ந்து அங்கிருந்து தூத்தூர் வழியாக சின்னத்துறை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தூத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மீனவ மக்களை சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். ராகுல்காந்தி வருகையை தொடர்ந்து கடலோர கிராமங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. முன்னதாக கேரள மாநிலத்தில் ஓகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் அவர் பார்வையிட உள்ளார். விவசாய பகுதிகளை ராகுல்காந்தி பார்வையிடுவது தொடர்பாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு முதல்முறையாக ராகுல்காந்தி நாளை தமிழகம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...