Friday, March 29, 2024

ஏன் இப்படி கர்நாடகாவுக்காக அலையுறீங்க… பிஜேபியை விளாசிய மமதா பானர்ஜி !

Share post:

Date:

- Advertisement -

கர்நாடக அரசியல் குழப்பம் தொடர்பாக, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க மாநில முதல்வருமான மமதா பானர்ஜி.

கர்நாடக அரசியல் நெருக்கடி குறித்து மம்தா பானர்ஜி கூறுகையில், “காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பூட்டி வைக்கப்பட்டிருப்பதை நாங்கள் ஊடகங்கள் மூலமாக, தெரிந்து கொண்டோம். ஊடகங்கள் அந்த பகுதிக்குள் நுழைவதைத் தடுக்கின்றனர். பாஜக குதிரை பேரத்தில் தீவிரமாக ஈடுபடுகிறது. சில நாட்களுக்கு முன்புதான், லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. அவர்கள் இப்போது, நாட்டைக் கவனிக்க வேண்டும். ஆனால் ஏன் இவ்வளவு பேராசை கொண்டவர்களாக உள்ளனர்? இது அழுக்கான அரசியல்.

இன்று சில கட்சி ஆட்சியில் உள்ளது, நாளை வேறு சில கட்சிகள் ஆட்சியில் இருக்கும். மொத்தமாக அரசியல் சாசனம் உடைக்கப்பட்டுள்ளது. ” இவ்வாறு மமதா பானர்ஜி தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், மாநில கட்சிகளை நாங்கள் ஆதரிக்கிறோம். கர்நாடகாவுக்குப் பிறகு அவர்கள் மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் செல்வார்கள். இதற்கு எதிராக அனைத்து பிராந்திய கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஊடகங்கள் கூட இதற்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்று தெரிவித்தார்.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவரான டெரெக் ஓ பிரையன் கூறுகையில், கர்நாடகாவில் வெட்கமில்லாத குதிரை பேரம் நடக்கிறது. இன்று மேற்கு வங்க சட்டசபையில் இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்சினைக்கு எதிராக, திரிணாமுல் காங்கிரஸ் குரல் எழுப்பியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...