Thursday, April 18, 2024

எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் இல்யாஸை தாக்கிய மனுசம்மந்தமாக மனித உரிமை ஆணையம் அதிரடி உத்தரவு….!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சை மாவட்ட SDPI கட்சியின் மாவட்ட தலைவரை தாக்கிய 3 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு ஒவ்வொருவருக்கும் தலா ₹ 25000 அபராதம் விதித்து மனித உரிமை ஆணையம் உத்தரவு.

கடந்த 2013ல் எஸ்டிபிஐ கட்சி சார்பாக பல்வேறு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டு செல்லும் போது, அதிரை காவல் அதிகாரிகள் அவதூறாக பேசினர்.இது குறித்து மேல் அதிகாரிகளிடம் புகார் அளித்திருந்தேன்.இதன் காரணமாக என் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்தனர்.இந்நிலையில் 1.04.2013 அன்று புதுப்பட்டிணம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த அந்த வழியாக செல்லும் போது வாகனத்தை இடைமறித்து அதிராம்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர்கள் ராஜ் மோகன், கமல், ரவிச்சந்திரன் பட்டுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முத்துலெட்சுமி ஆகியோர் என்னை அவதூறாக பேசி கடுமையாக தாக்கினர்.என்னுடைய செல்போன்களையும் பறித்துக் கொண்டனர். இவ்வாறு மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு செய்திருந்தார்.

இந்நிலையில் இதனை விசாரித்த நீதிபதி நீதிபதி டி.ஜெயச்சந்திரன், சாட்சியம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது சப்-இன்ஸ்பெக்டர்கள் மூன்று பேரும் மனித உரிமை மீறலில் ஈடுபட்டிருப்பது தெரிகிறது.ஆகவே சப் இன்ஸ்பெக்டர்களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை தமிழக அரசு ஒரு மாதத்துக்குள் மனுதாரருக்கு வழங்கிவிட்டு அவர்களது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...