Friday, April 19, 2024

இரண்டு மாதங்களாகியும் சீரமைக்கப்படாத அதிரை பேருந்து நிலையம்..!! கண்டுகொள்ளாத அரசு அதிகாரிகள்..!!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு 15.11.2018 அன்று அடித்த கஜா புயலால் டெல்டா பகுதிகளுக்கு அதிகமாக சேதம் ஏற்பட்டது.

இந்த புயலால் வீடுகள், கடைகள், அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், பள்ளிவாசல்கள் போன்ற பல பொருட்கள் சேதமடைந்ததோடு அனைத்து உயிரினங்களும் பாதிப்புக்குள்ளானது.

இந்நிலையில் சேதமடைந்த இடங்களில் சீரமைக்கும் பணி நடைபெற்று தற்பொழுது பழைய நிலைக்கு திரும்புகிறது.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்திலுள்ள பேருந்து நிலையத்தில் மேற்கூரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு அடித்த கஜா புயலில் உடைந்து விழுந்தது.

பேருந்து நிலையம் என்பது அதிகமாக பொதுமக்களும், வாகனங்களும் குவியும் இடமாக இருக்கின்றது.

இந்நிலையில் இரண்டு மாதங்களாகியும் சரிசெய்யப்படாமல் இந்த மேற்கூரை விழுந்து கிடப்பதால் அதிகமான பொதுமக்களும், வியாபாரிகளும், வாகனஓட்டிகளும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

எனவே அதிரை பேருந்து நிலையத்தில் விழுந்து கிடக்கும் மேற்கூரையை உடனே சரிசெய்யுமாறு பொதுமக்கள் சார்பாக அரசு அதிகாரிகளை கேட்டுக்கொள்கிறோம்.

dav

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...