Thursday, April 25, 2024

இனி நீங்கள் பேலன்ஸ் இல்லாமலே கால் பண்ணலாம்!

Share post:

Date:

- Advertisement -

பிராட்பேண்ட் மற்றும் வைஃபை மூலம் தொலைபேசி அழைப்புகளை செய்யும் வசதிக்கு டிராய் ஒப்புதல் அளித்துள்ளது!

தனது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள ஏர்டெல் மற்றும் ஜியோ என இரு நிறுவனங்களும் தங்களுக்குள் போட்டியாக பல்வேறு புதிய திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது.

இதையடுத்து வாடிக்கையாளர்களும் யாருடா குறைவான விலையில் அதிக சலுகையை கொடுக்கிறார்கள் என்று வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்நிலையில், தொலைபேசியில் பேலன்ஸ் இல்லாமலே கால் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது..!

வைஃபை மற்றும் ப்ராட்பேண்ட் மூலம் தொலைபேசி அழைப்புகளை செய்ய இன்டர்நெட் டெலிபோனி (internet telephony app) செயலியை நடைமுறைக்கு கொண்டுவர ஒப்புதல் அளித்துள்ளதாக இந்திய தொலைதொடர்பு ஒழுங்கு முறை கட்டுப்பாட்டு ஆணையம் (TRAI) தெரிவித்துள்ளது.

இது குறித்து டிராய்யின் ஆலோசகர் அரவிந்த்குமார் பேசுகையில்..!
”மொபையில் சிக்னல் மோசமாக இருக்கும் இடங்களில் கூட இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெற முடியும் வீட்டில் மற்றும் தூரப்பயணங்களின்போது வைஃபை மற்றும் ப்ராட்பேண்ட் வசதி இருந்து, மொபைலில் சிக்னல் கிடைக்காமல் இருந்தால், செயலியை பயன்படுத்தி தொலைப்பேசி அழைப்புகளை செய்யலாம்.

இந்த முறையை பி.எஸ்.என்.எல், ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் சில மொபைல் நெட்வொர்க் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களும் இந்த செயலியை பயன்படுத்தி பயன்பெறலாம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...