அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் (AFFA) சார்பாக 16 ம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான கால்பந்துத் தொடர் போட்டி நேற்று முன்தினம் மாலை கிராணி மைதானத்தில் தொடங்கியது.
அதில் இன்று மாலை நடைபெற வேண்டிய பொதக்குடி – ஆலத்தூர் அணிகள் இடையேயான போட்டி, இன்று காலை 8 மணியளவில் நடைபெற்றது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் ஆடி முடித்தனர்.
பின்னர் நடைபெற்ற ட்ரைபிரேக்கரில் ஆலத்தூர் அணி 5-4 என்ற கோல் கணக்கில் ரியாளத் FC பொதக்குடி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
குறிப்பு : இன்று மாலை விளையாட இருந்த ஆலத்தூர் அணி தஞ்சையிலும், அதிரை AFFA அணி ஆலத்தூரில் காலிறுதி போட்டியில் விளையாட உள்ளதாலும் இன்று மாலை நடைபெற இருந்த ஆட்டம், காலை நடைபெற்றது. இதனால் இன்று மாலை போட்டிகள் கிடையாது என்றும், நாளை முதல் வழக்கம்போல் தினமும் 2 போட்டிகள் நடைபெறும் என்றும் AFFA அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.