அதிரை வெஸ்டர் ன் கிரிக்கெட் கிளப் நடத்தும் 22-ஆம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி 22/04/2019 அதிரை மேலத்தெரு பெரிய மருதநாயகம் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் ஏழாம் நாள் ஆட்டமாக இன்று இரு ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் ராசியங்காடு அணியினரும் MAM திருச்சி அணியினரும் மோதினர். முதலில் பேட் செய்த ராசியங்காடு அருள் 11ஸ் அணி 17.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தனர். பின்னர் 148 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய திருச்சி MAM அணியினர் 14.4 ஒவர்களில் 10 விக்கெட் இழப்பிற்கு 60 ரன் மட்டுமே எடுத்தனர் . இதையடுத்து ராசியங்காடு அருள் 11ஸ் அணி வெற்றி பெற்றனர்.
பிற்பகல் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் ராசியங்காடு அருள் 11ஸ் அணியினரும் அதிரை WCC அணியினரும் மோதினர். இதில் நானையம் சூழற்சியில் வெற்றி பெற்ற ராசியங்காடு அருள் 11ஸ் அணியினர் தடுப்பு பணியினை தேர்வு செய்தனர். இதில் WCC அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 18.5 ஒவர்களில் 146 ரண்கள் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தனர். பின்னர் 147 என்ற இலக்குடன் களமிறங்கிய ராசியங்காடு அருள் 11ஸ் அணியினர் 122 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் ராசியங்காடு அணி தோல்வியடைந்தனர்.
நாளைய தினம் இரு ஆட்டங்கள் :
காரைக்கால் United CC vs தஞ்சாவூர் CC
மதியம் 2:00 மணியளவில் நடைபெறும் ஆட்டத்தில் ElEVEN ஸ்டார் ராம்நாடு vs நாளை காலையில் வெற்றி பெறும் அணி
குறிப்பு : அதிரை WCC அணி நடத்தும் இத்தொடர் குறித்த தகவல் மற்றும் ஆட்ட முடிவுகள் தினமும் அதிரை எக்ஸ்பிரஸில் பதிவேற்றம் செய்யப்படும்.