அதிரை எக்ஸ்பிரஸ்:-
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டினம், வாளக்கொள்ளையைச் சேர்ந்த பாலகுமார் (வயது-40), (கவிதா வயது-32) கணவன் மனைவி இருவரும் அதிராம்பட்டினத்திலிருந்து முத்துப்பேட்டை கடற்கரைச் சாலையில் இன்று (16/12/2018) மாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொடிருந்தனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி கணவன், மனைவி இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்தி மூலம் அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு முதலுதவி செய்யப்பட்டு. பின்பு அதிராம்பட்டினம் தமுமுக அவசர ஊர்தி மூலம் பட்டுக்கோட்டை அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.