தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் செயல்பட்டு வரும் மொபைல் கடையில் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் திருட முயற்சி.
கொரோனா தொற்று காரணமா ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததால் ஒத்துழைக்கும் வண்ணம் வியாபாரிகள் கடைகளை அடைத்து இருக்கின்றனர்.இந்நிலையில் நேற்று(26.3.2020) குறிப்பிட்ட மொபைல் கடையில் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயற்சித்து இருக்கின்றனர்,பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததை கண்டு இரண்டு பூட்டையும் உடைத்து விட்டு ஓடி சென்று விட்டனர்.
ஊரடங்கு உத்தரவால் வியாபாரிகள் கடைகளை அடைத்து ஒத்துழைப்பு தந்து கொண்டிருக்கின்றனர், ஆனால் கடைகளுக்கு பாதுகாப்பின்றி கொள்ளையர்கள் பூட்டை உடைத்து செல்லும் வகையில் இருக்கிறது.
இந்த சம்பவத்தால் கடைகளை அடைத்து இருக்கும் வியாபாரிகள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது.உடனடியாக காவல்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்பது வியாபாரிகளின் கோரிக்கையாகும்.