கஜா புயலால் உருக்குலைந்த அதிரையில் டெங்கு, மலேரியா மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவுவதாக புகார் தெரிவிக்கப்பட்டு வந்தது. இவ்விவகாரம் குறித்து நமது அதிரை எக்ஸ்பிரஸ் சார்பில் தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
அதனைத் தொடர்ந்து இன்று சனிக்கிழமை அதிராம்பட்டினத்தில் தஞ்சை மாவட்ட சுகாதாரத்துறை ஆய்வாளர், டிடிஹெச், ஹெல்த் இன்ஸ்பெக்டர், தாமரங்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் ஆகியோர் இணைந்து காய்ச்சல் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் அதிராமபட்டினம் பேரூராட்சி துப்புறவு ஆய்வாளர், மேஸ்திரி, சுகாதார ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு ஆய்வு செய்தனர்.
மேலும் அதிரை பேரூராட்சியின் சார்பில் கொசு மருந்து மற்றும் சுகாதாரத்துறை சார்பில் நிலவேம்பு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.