அதிரையில் 1942 ம் ஆண்டு கடும் காலரா நோயின் கொடூர தாக்கத்தால் பலர் சிக்குண்டு ஒரு நாளைக்கு பத்து வீதம் பேர் சராசரியாக உயிரிழந்த சம்பவத்தை பெரியோர்கள் யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
இந்த காலரா நோயின் கொடூர தாக்குதலில் இருந்து அதிரையர்கள் விடுபட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஹஜ்ரத் ஷைகுனா ஆலிம் அவர்களால் புஹாரி ஷரீஃப் துவங்கப்பட்டது.
அன்று துவங்கிய இந்த புஹாரி ஷரீஃப் இன்று 76 ம் ஆண்டை பூர்த்தி அடைந்திருப்பது மட்டுமின்றி இன்று வரையிலும் காலரா என்கிற நோய் அதிரையை எட்டிப் பார்க்கவில்லை எனலாம்.
அவ் வகையில் இந்த வருடம் புஹாரி ஷரீஃப் நாளை (12-08-2018) ஞாயிற்றுக்கிழமை முதல் துவங்க உள்ளது.
தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும் இந்த புஹாரி ஷரீஃபில், அதிகாலை பஜ்ர் தொழுகைக்கு பிறகு திக்ரு மஜ்லிஸும், அதனைத் தொடர்ந்து புஹாரி ஷரீஃப் ஓதப்பட்டு உலமாக்களின் சொற்பொழிவும் நடைபெறும்.
பின்னர் து ஆ விற்கு பிறகு தப்ரூக் வழங்கப்படும்.
குறிப்பு: காலை 7.45 மணிக்கு கேட் பூட்டப்படும்.