அதிரையில் ஒரு காலத்தில் கடும் காலரா நோயின் கொடூர தாக்கத்தால் ஒரு நாளைக்கு பத்து வீதம் பேர் சராசரியாக உயிரிழந்த சம்பவத்தை பெரியோர்கள் யாராலும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.
இந்த காலரா நோயின் கொடூர தாக்குதலில் இருந்து அதிரையர்கள் விடுபட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் ஹஜ்ரத் ஷைகுனா ஆலிம் அவர்களால் 1942 ம் ஆண்டு புஹாரி ஷரீஃப் துவங்கப்பட்டது.
அன்று துவங்கிய இந்த புஹாரி ஷரீஃப் இன்று 76 ம் ஆண்டை பூர்த்தி அடைந்திருப்பது மட்டுமின்றி, காலரா என்கிற கொடிய நோய் அதிரையை இன்று வரையிலும் எட்டிப் பார்க்கவில்லை எனலாம்.
கடந்த ஆகஸ்ட் மாதம் (12-08-2018) ஞாயிற்றுக்கிழமை இவ்வருடத்திற்கான புஹாரி ஷரீஃப் ஆரம்பம் ஆனது.
தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும் இந்த புஹாரி ஷரீஃப், நாளை (24-09-2018) திங்கள்கிழமை நிறைவு பெற உள்ளது.
அதிகாலை ஃபஜ்ர் தொழுகை முடிந்தவுடன் திக்ர் மஜ்லிஸும் தொடர்ந்து புஹாரி ஷரீஃப் ஓதப்பட்டு உலமாக்களின் (பயான்) சிறப்பு சொற்பொழிவும் நடைபெற உள்ளது.
இதன் பின்னர் சிறப்பு துஆ வுடன் இவ்வருட புஹாரி ஷரீஃப் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.