அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப்(WFC) சார்பில் கால்பந்து தொடர் போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதில் இன்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை WFC அணியினரும் திருச்சி அணியினரும் விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற முதல் பகுதிநேர ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாம் பகுதி நேர ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்ததால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. இறுதியில் டை பிரேக்கர் முறை மூலம் 5-4 என்ற கோல் கணக்கில் அதிரை WFC அணியினர் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தையும் முதல் பரிசையும் தட்டிச்சென்றனர். திருச்சி அணியினர் இரண்டாம் பரிசை தட்டிச்சென்றனர்.
மாலை 6 மணியளவில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் இத்தொடரில் சிறப்பாக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்ற அணியினருக்கு அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்.