அதிரை பிப் 12
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் கழகத்தின் துணைப்பொது செயலாளரும் ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினருமான டி.டி.வி. தினகரன் அவர்கள் சிறப்புரையாற்றினார், தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் அதன் ஒரு பகுதியாக அதிரையில் இன்று மாலை சிறப்புரையாற்றினார்.
தமிழகத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கின்ற மக்கள் விரோத ஆட்சி மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று கடுமையாக சாடினார், அம்மா ஆட்சி! அம்மா ஆட்சி!! என்று சொல்லிக்கொண்டு வலம் வரும் இன்றைய ஆட்சியாளர்கள் அம்மா அனுமதிக்காத மீத்தேன், ஹைட்ரோகார்பன், நியூட்ரினோ மற்றும் உதய் மின் திட்டம் என அனைத்து மத்திய அரசின் திட்டங்களுக்கும் கையெழுத்திட்டு தமிழக மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டார்கள் என்றார்.
முத்தலாக் சட்டத்தை கொண்டு வர துடிக்கும் மத்திய அரசு சிறுபான்மை மக்களின் மேல் குறிப்பாக சிறுபான்மை பெண்கள் மீது அக்கறை காட்டுவது போல் பிம்பத்தை உருவாக்குவது மிகவும் விந்தையாக இருக்கிறது என்றார். இக்கூட்டத்திற்கு அதிரை மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளானோர் பங்கேற்றனர்.