தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிற்குட்பட்ட அதிராம்பட்டினத்தில் பொட்டு என்கிற மூதாட்டி இன்று வாக்கு அளிக்க வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார்.
அப்போது, அவரது ஓட்டை ஏற்கனவே மற்றோருவர் செலுத்தி விட்டதால், வாக்களிக்க முடியாது என்றும், மூதாட்டியை வீட்டுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் கூறியதாகவும் கூறப்படுகிறது. அதற்கு அந்த மூதாட்டி தன்னிடம் அனைத்து ஆவணங்களும் உள்ளன. ஏன் என்னால் வாக்களிக்க முடியாது என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் கோபமடைந்த அந்த மூதாட்டி வாக்குச்சாவடி மையத்தின் வெளியே தர்ணாவில் ஈடுபட்டார். பின்னர் அவரை அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அவரின் பெயரிலேயே வாக்கு செலுத்த அனுமதி அளித்துள்ளனர். அம்மூதாட்டியும் தனது ஓட்டை பதிந்துவிட்டு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகம் முழுவதிலுமே ஆங்காங்கு கள்ள ஓட்டு பதிவானதாகவும், அரசியல் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன