அதிரையில் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்ற முதியவரை தமுமுகவினர் மடக்கி பிடித்தனர்.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் தொண்டியை சேர்ந்த சுல்த்தான் என்பவர் அவ்வப்போது பேருந்து நிலையத்தில் வந்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா பொட்டலம் விற்பனை செய்யபடுவதாக தமுமுகவினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து ரகசிய நோட்டமிட்ட இளைஞர் அணியினர் கஞ்சா விற்ற முதியவர் சுல்த்தானை கையும் களவுமாக பிடித்தனர் அப்போது கஞ்சா வாங்கி கொண்டிருந்த இளைஞர்கள் ஓட்டம்பிடித்தனர்.
இதன் பின்னர் தமுமுக அலுவலகத்தில் அவருடம் நடத்திய விசாரணையில் அதிரையில் இளைஞர்கள், மாணவர்கள் தம்மிடம் தொடர்ந்து கஞ்சா வாங்கிவருவதாகவும், இதில் வயது வித்தியாசமின்றி அனைவரும் வாங்கியுள்ளனர் (சில இளைஞர்களின் அடையாளத்தையும் கூறியுள்ளார்) என தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேகர்,பெரியசாமி, சேகரின் அம்மா செல்லம் ஆகியோர் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்து மீண்டும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வரும் வேளையில் இம்முதியவர் சிக்கி கொண்டது குறிப்பிடதக்கது..