அதிராம்பட்டினம் கடற்கரைத்தெருவில் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம் பல ஆண்டுகளாக சேவையாற்றி வருகிறது. அந்த சேவைகளின் தொடர்ச்சியாக அதிரையில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
பொதுத்தேர்வு எழுதக்கூடிய 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு எப்படி எழுதுவது, தேர்வுக்காக எப்படி தயார் செய்வது, போன்ற மாணவர்களுக்கு பயனளிக்கக்கூடிய விஷயங்கள் மற்றும் மாணவர்களுக்கு கற்பித்தல் ஆகியவை சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு ப்ரொஜெக்டர் வசதி மூலம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
வாரந்தோறும் வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களில் இஷா தொழுகைக்கு பிறகு அதிரை கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளிக்கு அருகில் உள்ள தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தில் நடைபெறும். இதில் அதிரையில் உள்ள அனைத்து 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.