தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் மேலத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சுகாதரம் மற்றும் உடல்தூய்மை குறித்து பயிற்சி மற்றும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டன.
மேலும் கை கழுவுவதற்கு தேவையான சோப்,கிருமி நாசினி(டெட்டால்),கைத்துடைக்க டவல் போன்றவைகள் ரோட்டரி சங்கத்தினரால் பள்ளிக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அதிரை ரோட்டரிசங்கத்தின் தலைவர். Rtn.MK.முகமது சம்சுதீன் தலைமைதாங்கினார்.
சங்கத்தின் செயளாலர்
Rtn.இசட்.அகமது மன்சூர் முன்னிலை வகித்தார்.ரோட்டரி சங்கத்தின் முன்னால் செயளர் Rtn. முகமது நவாஸ்கான்,
உறுப்பினர்கள் Rtn.அன்வர் ரஹ்மான்,Rtn.முகமது தமீம் மற்றும் நடுத்தெரு ஊ ஒ ந பள்ளியின் தலைமை ஆசிரியை. திருமதி.எஸ்.மாலதி,திரு.டேவிட் ஆரோக்கியராஜ்.
மேலத்தெரு பள்ளியின் தலைமை ஆசிரியை .
மு.தமிழ்ச்செல்வி மற்றும் சமூக ஆர்வலர்.A.ஜாஹீர் ஹூசைன் (ஹயாத் ரெஸ்ட்டாரண்ட்) மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.