அதிரையில் ஆதரவற்ற மூதாட்டி மரணம் !
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்தவர் லைலா வயது 63 தனது கனவர் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்து விட்டார்.
கனவர் இறந்தவுடன் தனிமையில் வாடிய லைலா கரையூர் தெரு மாரியம்மன் கோவிலில் தஞ்சம் அடைந்தார்,அங்கு வரும் பக்தர்கள் அளிக்கும் உணவை உண்டு வாழ்ந்து வந்த அவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நிலை பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை சுமார் 11மணியளவில் லைலா காலமானார்.
இதனை அடுத்து காவல் துறை மூலம் கிடைத்த தகவலின் பேரில் அதிரை தன்னார்வ இளைஞர்களுடன் CBD மாவட்ட தலைவர் செய்யது அஹமது கபீர் அஃப்ரித், கனி.ஆரிஃப், அலெக்ஸ் உள்ளிட்டர்வர் உடலை பைத்துல்மால் அவசர ஊர்தி மூலம் மீட்டு வண்டிப்பேட்டை பொது மயானத்தில் இந்து முறைப்படி அடக்கம் செய்தனர்.
முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலர், வருவாய் அதிகாரி,கிராம நிர்வாக அலுவலர் காவல் துறை அதிகாரி ஆகியோர் இறந்த மூதாட்டியின் உடலை அடக்க தடையில்லா ஒப்புதல் வழங்கினர் .