தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாளை உலகம் முழுவதிலும் கொண்டாடபட்டு வருகிறது.
நேற்றைய தினம் வளைகுடா போன்ற நாடுகள் பெருநாள் கொண்டாடிவிட்ட நிலையில் இன்று இந்தியா முழுதும் மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது.
வெளியூர்களில் பணி நிமித்தமாக வசிக்கும் அதிரையர்கள் இந்த பெருநாளில் ஒன்று கூடி பெருநாளை கொண்டாடியது அதிரையில் விழாக் கோலம் பூண்டது.
மேலும் அதிரை சிறுவர் சிறுமியர்களும் வித விதமான புத்தாடைகளை அணிந்து மகிழ்ச்சியாக இந்த வருட ஹஜ்ஜுப் பெருநாளை கொண்டாடி அசத்தினர்.