Friday, March 29, 2024

அதிரையர்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை !

Share post:

Date:

- Advertisement -

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரையில் வீசிய கஜா புயலை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மின்தடை ஏற்பட்டன.

புயலால் சேதமடைந்த மின் கம்பங்கள், மின் ஒயர்கள் ஓரளவுக்கு சரி செய்து அவசர கதியில் இன்றோ அல்லது நாளை காலையோ மின் வினியோகம் செய்ய உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில் நாம் செய்ய வேண்டியது என்ன?

கஜா புயலின் வேகத்தால் நமது வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்கள் நல்ல முறையில் உள்ளதா என கண்காணிக்க வேண்டும்.

வெளிவாசலுக்கும்,பின்புறத்திற்க்கு செல்லும் மின் வயர்கள் சேதாரம் இன்றி நல்ல முறையாக உள்ளாதா என கவனிக்க தவறாதீர்.

மொட்டை மாடியில் போடப்பட்ட கூரைகள் காற்றில் அடித்து சென்றுள்ளது,அதில் இருந்த மின் இணைப்பை முழுவதுமாக மின் தொழிலாளர் கொண்டு முழுமையாக நீக்க வேண்டும்.

ஆடு,மாடு தொழுவங்களில் இருந்த மின் இணைப்பு சரிவர உள்ளனவா என கண்காணிக்க மறவாதீர்.

கல்வி கூடங்களில் உள்ள மின் சாதன பொருட்கள் சேதாரம் இன்றி உள்ளதா என ஆசிரியர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தென்னை தோப்புகளில்ப் ஆழ்துளை கிணறுகளுக்கு போடப்பட்ட மின் இணைப்பை மின் வாரிய ஊழியரின் துணையுடன் துண்டிக்க வேண்டும்.

குறிப்பாக மின் வாரிய ஊழியர்கள் அவசர கதியில் மின் இணைப்பை கொடுக்க அயராது பாடு படுகின்றனர், அவர்களின் பணி 100℅ முழுமை பெறாத நிலையில் உயரழுத்த மின் வயர்கள் முறையாக பொருத்தி இருக்க மாட்டாது, இதனை பாதசாரிகள், வாகன ஓட்டிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்கண்ட பணிகளுக்கு மின்சார ஊழியர்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும், அவசர கால உதவிக்கு மின்சார வாரியத்தையோ,அல்லது தன்னார்வலர்களை அழைத்து உதவி கோரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...