4 நாளைக்கு முன்னாடியே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதில் சிவகங்கை தொகுதி மக்கள் எப்படி வாக்களிக்க வேண்டும் என்று சொல்லி தந்தார்.
“18-ந் தேதி.. வாக்கு இயந்திரத்தில் 3-வதாக தாமரை சின்னம் இருக்கும்.. அதுக்கு நேரா இருக்கிற பட்டனை அழுத்தி.. என்னை வெற்றி பெற செய்யுங்க” என்று டெமோ காட்டி எச்.ராஜா ஒரு பாடமே நடத்தி இருந்தார்.
இதற்கு சிவகங்கை தொகுதி மக்களே நிறைய ஆதரவு, எதிர்ப்புமாக கமெண்ட்களை போட்டிருந்தனர். இந்நிலையில், இன்று காலை எச்.ராஜா காரைக்குடியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டியில் “கடந்த நாடாளுமன்றத் தேர்தலைவிட இந்தத் தேர்தலில் பாஜக அதிகப் பெரும்பான்மையில் வெற்றி பெறும். மீண்டும் நரேந்திர மோடி ஆட்சி புரிவார். இந்த தேர்தல் ஜனநாயக தேர்தல் ஜனநாயகம் வெல்லும். மீண்டும் பாஜக ஆட்சி புரியும்” என்று சொல்லி விட்டு சென்றார்.